ஒற்றப்பாலம் அருகே ரூ.70 ஆயிரம் கள்ளநோட்டு கடத்திய வாலிபர் கைது

ஒற்றப்பாலம் அருகே போலீசார் நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ளநோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒற்றப்பாலம் அருகே ரூ.70 ஆயிரம் கள்ளநோட்டு கடத்திய வாலிபர் கைது
Published on

கொழிஞ்சாம்பாறை:

பாலக்காடு வழியாக கேரளாவுக்குள் கள்ளநோட்டு கடத்தப்படுவதாக சொர்ணூர் டி.எஸ்.பி. முரளிதரனுக்கு தகவல் கிடைத்தது. இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஒற்றப்பாலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் அப்துல் முனீருக்கு உத்தரவிட்டார்.

போலீசார் கோதகுறுச்சியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒரு வாலிபர் இருந்தார். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

அவரிடம் நடத்திய சோதனையில் ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 2 ஆயிரம் கள்ளநோட்டுக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் ஒற்றப்பாலம் அருகே வரோடு பகுதியை சேர்ந்த ரின்ஷாத் (வயது 20) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com