சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை- பெற்றோர் புகார்

சோழிங்கநல்லூரில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் போலீசில் புகார் செய்துள்ளனர்.
இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை
Published on

சோழிங்கநல்லூர்:

சோழிங்கநல்லூர் காந்திநகர், துர்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 46). இவருடைய மனைவி பாத்திமா (42). இருவரும் கூலிவேலை செய்து வருகின்றனர். இவருடைய மகள் சுகன்யா (19). இவர் பிளஸ்-2 படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்று விட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்த வேளாங்கண்ணி தன்னுடைய மகள் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை-ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சுகன்யாவின் பெற்றோர் செம்மஞ்சேரி போலீசில் புகார் செய்துள்ளனர். அந்த புகாரில் தன்னுடைய மகளின் சாவில் சந்தேகம் உள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது. சுகன்யாவுக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும், வருகிற ஞாயிற்றுக்கிழமை மாப்பிள்ளை முடிவு செய்ய இருந்ததாகவும் தெரிகிறது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com