ஒகேனக்கல் அருகே இளம்பெண் தற்கொலை

ஒகேனக்கல் அருகே கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ஒகேனக்கல் அருகே இளம்பெண் தற்கொலை
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்துள்ள கூத்தப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். கூலி தொழிலாளியான இவரது மனைவி காயத்ரி (வயது20). 

திருமணத்திற்காக கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்தனர். இதனால் மனமுடைந்த காயத்ரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காயத்ரி இறந்த சம்பவம் குறித்து தருமபுரி உதவி கலெக்டர் சிவனருள் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com