ஊழியரை அரிவாளால் மிரட்டி பெட்ரோல் நிரப்பிய வாலிபர்கள்

பெருமாநல்லூர் அருகே ஊழியரை அரிவாளால் மிரட்டி வாலிபர்கள் பெட்ரோல் நிரப்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ஊழியரை அரிவாளால் மிரட்டி பெட்ரோல் நிரப்பிய வாலிபர்கள்
Published on

திருப்பூர்:

கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெருமாநல்லூர் அருகே உள்ள ஈட்டி வீரம்பாளையத்தில் தனியார் பெட்ரோல் பங்க் உள்ளது.

சம்பவத்தன்று இரவு இந்த பெட்ரோல் பங்கில் 2 ஊழியர்கள் பணியில் இருந்தனர். அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர்.

அவர்கள் அங்கிருந்த ஊழியரிடம் ரூ. 600-க்கு பெட்ரோல் நிரப்பும் படி கூறினார்கள். அதன்படி ஊழியர் பெட்ரோல் நிரப்பினார். பின்னர் அதற்கான பணத்தை கேட்டார்.அப்போது மோட்டார் சைக்கிளின் பின்புறம் இருந்த வாலிபர் திடீரென தான் வைத்திருந்த அரிவாளால் பெட்ரோல் பங்க் ஊழியரை எங்களிடமே பணம் கேட்கிறாயா? என மிரட்டினார். மேலும் அரிவாளால் வெட்டவும் ஓங்கினார். இதனால் பயந்து போன பெட்ரோல் பங்க் ஊழியர் அங்கிருந்து சென்று விட்டார். அதன் பின்னர் இரு வாலிபர்களும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

இந்த காட்சி பெட்ரோல் பங்கில் உள்ள சி.சி.டி.வி. காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இது தொடர்பாக போலீசில் எந்த புகாரும் கொடுக்கவில்லை. இது குறித்து பெருமாநல்லூர் போலீசாரிடம் கேட்ட போது, பெட்ரோல் பங்கில் நடைபெற்ற சம்பவம் சமூக வலை தளங்களில் தான் பரவி வருகிறது.

இது குறித்து எங்களிடம் புகார் எதுவும் வரவில்லை. புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com