ஈரோட்டில் தண்டவாளத்தை கடந்த வாலிபர் ரெயில் மோதி பலி

ஈரோட்டில் தண்டவாளத்தை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார். இந்த சம்பவம் குறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

ஈரோடு:

ஈரோடு, கரூர் ரோடு கோல்டன் மஹால் பின்புறம் உள்ள தண்டவாளத்தில் நேற்று இரவு சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆணின் உடல் கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் சபரி ராஜ் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் ? போன்ற விவரம் தெரியவில்லை. இறந்த வாலிபர் சந்தன கலர் கட்டம் போட்ட சட்டை அணிந்திருந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அந்த வாலிபர் ரெயில் வருவதை கவனிக்காமல் தண்டவாளத்தை கடந்தபோது ரெயில் மோதி இறந்தது தெரியவந்தது.

இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com