பொறையார் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

பொறையார் அருகே இளம்பெண் தீக்குளித்து தற்கொலை: போலீசார் தீவிர விசாரணை

பொறையார் அருகே இளம்பெண் மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Published on

தரங்கம்பாடி:

பொறையார் அருகே திருக்கடையூர் மெயின்ரோடு தொடரி பேட்டையை சேர்ந்தவர் இளவரசு. இவரது மனைவி அகிலா(வயது32). இவர்களுக்கு திருமணமாகி 7 வருடங்கள் ஆகிறது. ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த அகிலா மண்எண்ணையை தனது உடலில் ஊற்றி தீக்குளித்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் பொறையார் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com