நேபாள நாட்டில் சீதா கல்யாணம் உற்சவம் - உபி முதல் மந்திரி பங்கேற்றார்

நேபாள நாட்டின் ஜனக்புரியில் நடைபெற்ற சீதா கல்யாண உற்சவத்தில் உபி முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டு ராமர்-சீதாதேவியை வழிபட்டார். #NepalSitadeviTemple #YogiAdityanath
நேபாள நாட்டில் சீதா கல்யாணம் உற்சவம் - உபி முதல் மந்திரி பங்கேற்றார்
Published on

காத்மண்டு:

நேபாள நாட்டின் ஜனகபுரியில் அமைந்துள்ளது சீதாதேவி கோவில். இது ராமரின் மனைவியான சீதாதேவியின் பிறந்த ஊராக கருதப்படுகிறது. இங்கு அமைந்துள்ள சீதாதேவி கோவிலுக்கு பலரும் வந்து சென்று வழிபடுவது வழக்கம்.

விவாஹ பஞ்சமியை முன்னிட்டு இந்த கோவிலில் சீதா கல்யாணம் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார். சீதா கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற யோகி ஆதித்யநாத் ராமர் - சீதாதேவியை வழிபட்டார். #NepalSitadeviTemple #YogiAdityanath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com