பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது

பயங்கரவாத தாக்குதல்களுக்கு நிதி திரட்டியது தொடர்பாக காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்குக்கு 22-ம் தேதி வரை விசாரணை காவல் விதிக்கப்பட்டது. #YasinMalik #JKLFbanned #NIAremand
பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி - காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் கைது
Published on

புதுடெல்லி:

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து பாகிஸ்தானுடன் இணைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இம்மாநிலத்தில் உள்ள பல்வேறு குழுவினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் சில அமைப்பினர் அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் மூலம் பயங்கரவாதிகளாக செயல்பட்டு வருகின்றனர்.

அவ்வகையில், இயங்கிவரும் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கத்துக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது.

பிரிவினைவாதி யாசின் மாலிக் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இயக்கம் பயங்கரவாதிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொண்டு இந்தியாவில் வன்முறையை ஆதரித்தும்  பிரிவினையை உருவாக்கும் காரியங்களையும் செய்து வருவதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடுப்புக்காவல் சட்டப்படி ஜம்முவில் உள்ள கோட்டா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த யாசின் மாலிக்குக்கு எதிராக கடந்த 2017-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த தீர்மானித்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அவரை நேற்று டெல்லிக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர்.

இன்று டெல்லி தேசிய புலனாய்வு சிறப்பு நீதிமன்றத்தில் யாசின் மாலிக்கை ஆஜர்படுத்திய அதிகாரிகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு உதவுவதற்காக நிதி திரட்டிய விவகாரம் தொடர்பாக விரிவாக விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை விசாரணை காவலில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதியிடம் தெரிவித்தனர். இதையடுத்து, வரும் 22-ம் தேதிவரை அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

30 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னாள் மத்திய மந்திரி முப்தி முஹம்மது சையத் மகள் ருபயா சையத் கடத்தல் வழக்கு மற்றும் 4 விமானப்படை வீரர்கள் படுகொலை உள்பட 30-க்கும் அதிகமான வழக்குகள் யாசின் மாலிக் மீது நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. #YasinMalik #JKLFbanned #NIAremand

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com