சாதியால் கடவுளையும் பிரிப்பதா? - உ.பி. முதல்வருக்கு மந்திரி கண்டனம்

அனுமாரை தலித் என்று குறிப்பிட்ட உத்தரப்பிரதேசம் முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள அம்மாநில மந்திரி கடவுள்களை சாதியால் பிரிப்பது தவறு என்று குறிப்பிட்டார். #DivideGods #UPminister #YogiAdityanath
சாதியால் கடவுளையும் பிரிப்பதா? - உ.பி. முதல்வருக்கு மந்திரி கண்டனம்
Published on

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆல்வார் மாவட்டத்தில் கடந்த வாரம் தேர்தல் பிரசாரம் செய்த உத்தரப்பிரதேசம் மாநில முதல் மந்திரி யோகி ஆதித்யாநாத், அனுமார் ஒரு காட்டுவாசி, தாழ்த்தப்பட்டவரான அவர் ஒரு தலித்தும்கூட. இந்தியாவில் வடக்கு முதல் தெற்குவரை கிழக்கு முதல் மேற்குவரை அனைத்து சமுதாயத்தினரையும் ஒருங்கிணைக்க அனுமார் பாடுபட்டார் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், உத்தரப்பிரதேசம் மாநில மந்திரி ஓம் பிரகாஷ் ராஜ்பர், ‘கடவுள்களை சாதியின் பெயரால் பிரிவுப்படுத்துவது தவறு. இதனால் தற்போது அனுமார் கோவில்களை தலித் சமூகத்தினர் கைப்பற்றுவது தொடர்பான சர்ச்சை ஏற்பட்டுள்ளது’ என்று யோகி ஆதித்யாநாத்தின் பேச்சுக்கு நேற்று கண்டனம் தெரிவித்துள்ளார். #DivideGods #UPminister #YogiAdityanath

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com