

இதற்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர் சகா இடம்பிடித்திருந்தார். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கெதிரான குவாலிபையர் 2-ல் விளையாடியபோது ஷிவம் மவி வீசிய பந்து சகாவின் வலது கை பெருவிரலை பலமாக தாக்கியது. இதனால் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் விளையாடுவாரா? என்ற சந்தேகம் இன்னும் இருந்து வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் டெஸ்டில் பங்கேற்பது குறித்து சகாவிற்கு முழு நம்பிக்கை இல்லை. இதுகுறித்து சகா கூறுகையில் ‘‘பிசிசிஐ என்னுடைய காயம் குறித்து ஒவ்வொரு நாளும் ஆராய்ந்து வருகிறது. இறுதியான முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது. உண்மையை சொல்ல வேண்டுமென்றால், நான் ஆப்கானிஸ்தான் டெஸ்டிற்கு தயாராகுவேனா என்பது தெரியவில்லை. அது என்னுடைய கையில் இல்லை.