கைதான வெனிசுலா அதிபரின் புகைப்படம் வெளியிட்டார் அதிபர் டிரம்ப்

புதிய அரசு அமையும்வரை வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என்றார் டிரம்ப் .ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.
கைதான வெனிசுலா அதிபரின் புகைப்படம் வெளியிட்டார் அதிபர் டிரம்ப்
Published on

வாஷிங்டன்:

வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப் பொருள் கடத்தப்படுவதாகவும், இதற்கு வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ உடந்தையாக இருப்பதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டி வந்தார்.

இதற்கிடையே, வெனிசுலா தலைநகர் கராகஸ் நகரில் இன்று அதிகாலை 2 மணியளவில் சுமார் 7 இடங்களில் அமெரிக்க ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இதனால் வெனிசுலாவில் அவசர நிலை பிரகடனம் செய்யப்படுவதாவும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வெனிசுலா அதிபரும், அவரது மனைவியும் நாடு கடத்தப்பட்டதாக அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்தார். வெனிசுலா நாட்டை அமெரிக்கா நிர்வாகம் செய்யும் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த அடாவடி நடவடிக்கையால் சர்வதேச அரசியலில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ரஷியா, ஈரான் உள்ளிட்ட நாடுகள் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் படத்தைப் பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படத்தில் வெனிசுலா அதிபர் கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com