search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2800 ஆக உயர்வு
    X

    மொராக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 2800 ஆக உயர்வு

    • மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
    • 2500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.

    மொராக்கோ நாட்டில் அட்லஸ் மலைத் தொடர் பகுதியில் அமைந்துள்ள மராகேஷ்சாபி பிராந்தியத்தில் கடந்த 8-ந் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஆயிரக்கணக்கானவர்களின் வீடுகள் இடிந்து தரைமட்டமானது. மலை பகுதியில் உள்ள கிராமங்கள் அனைத்தும் அழிந்தன.

    நிலநடுக்கத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். அங்கு மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில் பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 2800-யை தாண்டிள்ளது. 2500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3 நாட்களை கடந்தும் மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

    Next Story
    ×