பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு

பெய்ரூட் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் கடுமையாக சேதமடைந்தன.
பெய்ரூட் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: 22 பேர் உயிரிழப்பு
Published on

பெய்ரூட்:

பாலஸ்தீன நகரமான காசா இஸ்ரேல் தாக்குதலில் உருக்குலைந்துள்ள நிலையில் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில், லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள குடியிருப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 100க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். தாக்குதலில் அப்பகுதியில் இருந்த குடியிருப்பு பகுதிகள் சேதமடைந்துள்ளன என லெபனான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்களின் உடல்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com