11 இந்திய மாலுமிகளை காப்பாற்றிய ஈரானிய கடலோர காவல்படையினர்

சூறாவளிக்காற்று மற்றும் கடல் சீற்றத்தால் இந்திய மாலுமிகள் இருந்த கப்பல் மூழ்கும் நிலைக்கு சென்றது.
கோப்பு புகைப்படம்
கோப்பு புகைப்படம்
Published on

தெஹ்ரான்:

ஓமன் நாட்டின் சோகர் துறைமுகத்திற்கு சர்க்கரை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று சூறாவளிக்காற்று மற்றும் கடல் சீற்றத்தினால் ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்தது. 

மூழ்கும் நிலையில் இருந்த இந்த கப்பலில் இருந்த 11 இந்திய மாலுமிகளையும் ஈரானிய கடலோர காவல்படையினர் மீட்டு கரை சேர்த்தனர்.

மாலுமிகள் அனைவரும் நலமாக இருப்பதாக கடலோர காவல்படையினர் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com