கொரோனாவுக்கு எண்ட் கார்டு போட்ட உலக சுகாதார அமைப்பு - ஆனாலும் ஒரு டுவிஸ்ட்.. என்ன தெரியுமா?

நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது.
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்
உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம்
Published on

கொரோனா வைரஸ் பெருந்தொற்று 2019 ஆண்டு இறுதியில் துவங்கியது. பின் பல்வேறு நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகின் இயல்பு நிலையை உலுக்கியது. கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உலகம் முழுக்க கோடிக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த கொடூர நோயின் தீவிரம் காரணமாக உலக சுகாதார மையம் கொரோனா வைரஸ் பாதிப்பை சர்வதேச மருத்துவ அவசர நிலையாக அறிவித்தது.

முதல் அலை, இரண்டாவது அலை என்று உலக நாடுகளை கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தொடர்ச்சியாக அச்சுறுத்தி வந்தது. புதிய நோய் பாதிப்பில் உலகமே பாதிக்கப்பட்ட நிலையில், இதற்கான தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது, இந்த பாதிப்பில் இருந்து எப்படி விடுபடுவது என்ற பணிகளில் மருத்துவத் துறை ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.

நீண்ட ஆய்வுக்கு பின் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்க்கும் திறன் கொண்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. பின் இந்த மருந்துக்கான தட்டுப்பாடு அதிகரித்தது. இவ்வாறு பல்வேறு நிலைகளில் கடந்த சில ஆண்டுகளாக உலக நிகழ்வுகளை கொரோனா வைரஸ் மொத்தமாக பாதித்தது. கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து பணியாற்றும் முறை, பெரும்பாலான பணிகள் டிஜிட்டல் முறைக்கு மாற்றம் என்று ஏராளமான மாற்றங்கள் அரங்கேறியுள்ளன.

கொரோனா வைரஸ் வீரியம் தற்போது குறைந்து இருப்பது, உலக நாடுகளில் இதன் மூலம் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருப்பது என்று பல்வேறு விஷயங்களை கருத்தில் கொண்டு கொரோனா வைரஸ் அவசர நிலை முடிவுக்கு வருவதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்து இருக்கிறது.

"எனினும், கொரோனா வைரஸ் முடிந்து விட்டதாக நினைக்க வேண்டாம். கடந்த வாரம் வரை கொரோனா வைரஸ் பாதிப்பு மூலம் ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டது. மேலும் இது எங்களுக்கு தெரிந்தவரையிலான கணக்கு மட்டும் தான்," என்று உலக சுகாதார அமைப்பு டுவிட் செய்துள்ளது. 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com