

இந்த போட்டியின்போது கொலம்பியா வீரர்கள் மிகவும் ஆக்ரோஷமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இங்கிலாந்து வீரர்களும் அதிக அளவில் மோதல் போக்கில் ஈடுபட்டனர். இங்கிலாந்து அணி 2 மஞ்சள் அட்டை பெற்றது. ஆனால் கொலம்பியா 6 மஞ்சள் அட்டை பெற்றது.
இந்த போட்டியின்போது இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி கேன், யங், வார்டி ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் நாளைமறுநாள் நடைபெறும் சுவீடனுக்கு எதிரான காலிறுதியில் பங்கேற்பார்களா? என்ற கேள்வி எழுந்தது.