மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

பாகூர்:

பாகூர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பிரதிஷ் (வயது 28), தொழிலாளி. இவருக்கும் சேலியமேடு பகுதியை சேர்ந்த நந்தினி என்பவருக்கும் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்தது. இதனால் பிரதிஷிடம் கோபித்துக்கொண்டு கடந்த 1½ ஆண்டுக்கு முன் நந்தினி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

மனைவி பிரிந்து சென்றதால் பிரதிஷ் மனவேதனையில் இருந்து வந்தார். நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். 

இது குறித்து பிரதிஷின் தாயார் கோமளா கொடுத்த புகாரின் பேரில் பாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com