பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி

கேரள மாநிலம் பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கியதால் தொழிலாளி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
பாலக்காடு அருகே காட்டு யானை தாக்கி தொழிலாளி பலி
Published on

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் புதுப்பரியாரத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 49). கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் மகன், 3 மகள்கள் உள்ளனர்.

நேற்று பிரபாகரன் அங்குள்ள ரப்பர் தோட்டத்தில் நடந்து வந்தார். அப்போது புதர்மறையில் இருந்த காட்டுயானை பிரபாகரனை தூக்கி வீசியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே படுகாயம் அடைந்து பரிதாபமாக பலியானார். இதை அறிந்து அதிர்ச்சியடைந்த ஊர் பொதுமக்கள் பாலக்காடு- கோழிக்கோடு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்ததும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சமாதானம் அடைந்த பொது மக்கள் கலைந்து சென்றனர். இந்த பகுதியில் காட்டு யானை தாக்கி இதுவரை 3 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com