மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை

பென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்த காணப்பட்ட தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி பிரிந்து சென்றதால் தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை
Published on

தருமபுரி:

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் டீக்கடை பகுதியை சேர்ந்தவர் சேட்டு (வயது30). இவருக்கும் திருப்பூரை சேர்ந்த தனலட்சுமி (26) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.

இந்தநிலையில் கணவன்- மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மீண்டும் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இதனால் கோபித்து கொண்டு தனலட்சுமி திருப்பூருக்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட சேட்டு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சேட்டு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com