ராமாபுரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி கைது

ராமாபுரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை கைது செய்த இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.
ராமாபுரத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை - தொழிலாளி கைது
Published on

போரூர்:

ராமாபுரம் குப்புசாமி தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். அருகில் உள்ள வெல்டிங் கடையில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று இரவு அதே பகுதியை சேர்ந்த அக்காள், தங்கையான 2 சிறுமிகள் தங்களது வீட்டின் மொட்டை மாடியில் நின்று விளையாடி கொண்டிருந்தனர்

அப்போது அங்கு வந்த மணிகண்டன் சிறுமிகளிடம் சில்மி‌ஷத்தில் ஈடுபட்டு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார்.

இது குறித்து சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுபற்றி மணிகண்டனிடம் தட்டிக் கேட்டனர். அவர் சிறுமிகளின் பெற்றோரை தாக்கி மிரட்டல் விடுத்தார்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை வடபழனி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி வழக்குபதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com