உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இங்கிலாந்து 33 ஓவரில் 133/3

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இங்கிலாந்து வீராங்கனைகள் நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
உலகக் கோப்பை இறுதிப் போட்டி: இங்கிலாந்து 33 ஓவரில் 133/3
Published on

இந்திய வீராங்கனைகளில் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு இருவரும் விளையாடினார்கள். அதிரடியாக விளையாட முடியாவிட்டாலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். இதனால் இங்கிலாந்து அணி முதல் 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 43 ரன்கள் எடுத்தது.

12-வது ஓவரை கயாக்வார்டு வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் வின்பீல்டு அவுட் ஆனார். அவர் 24 ரன்கள் சேர்த்தார். அடுத்து சாரா டெய்லர் களம் இறங்கினார். 15-வது ஓவரை பூனம் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பியுமோன்ட் ஆட்டம் இழந்தார். இவர் 23 ரன்னில் வெளியேறினார்.

அடுத்து 3-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஹீதர் நைட் ஜோடி சேர்ந்தார். நைட் 1 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். முதல் 10 ஓவரில் சிறப்பாக விளையாடி இங்கிலாந்து வீராங்கனைகள் அடுத்து தொடர்ச்சியாக மூன்று விக்கெட்டுக்களை இழந்ததால், சற்று தடுமாற்றம் அடைந்தது.

அதன்பின் 4-வது விக்கெட்டுக்கு டெய்லர் உடன் ஸ்சிவர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமா விளையாடி ஆட்டத்தை தங்கள் பக்கம் திருப்பினார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com