பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நெற்பயிருடன் பெண்கள் முற்றுகை

ஆக்கிரமிப்பு பகுதிகளை அகற்ற கூடுதலாக 20 நாட்கள் அவகாசம் கொடுத்தால் பயிரிட்ட நெற்பயிரை அறுவடை செய்து விடுவோம் என்று பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.
பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நெற்பயிருடன் பெண்கள் முற்றுகை
Published on

பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள விடதண்டலம் ஏரிப் பகுதியை விவசாயிகள் சிலர் ஆக்கிரமித்து நெல் பயிரிட்டுள்ளனர். தற்போது ஆக்கிரமிப்பு ஏரி பகுதியை மீட்கும் பணியில் கோட்டாட்சியர் முத்துசாமி மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பு செய்து நெல் பயிரிட்ட இடங்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் உள்பட சுமார் 50-க்கும் மேற்பட்டோர் நெற்பயிருடன் பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். 20 நாட்கள் கூடுதலாக அவகாசம் கொடுத்தால் நெற்பயிரை அறுவடை செய்து விடுவோம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com