திண்டுக்கல்லில் இன்றும் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்

திண்டுக்கல்லில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் இன்றும் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் நகரில் பல வார்டுகளில் 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். இதனால் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

நேற்று பழனி சாலையில் காலிக்குடங்களுடன் மறியலில் ஈடுபட்ட நிலையில் இன்று 40 மற்றும் 41-வது வார்டுக்குட்பட்ட பொது மக்கள் காலிக்குடங்களுடன் குடைப்பாறைப்பட்டியில் மறியலில் ஈடுபட்டனர்.

ஜிகா பைப்புகள் பொருத்தப்பட்டதால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் 2 மாதமாக இதே நிலை தொடர்வதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

எனவே பழைய முறையிலேயே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். நகர் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெற்றிச் செல்வி, சேகர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com