உசிலம்பட்டி அருகே பெண் போலீஸ் தற்கொலை

பெண் போலீஸ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உசிலம்பட்டி அருகே பெண் போலீஸ் தற்கொலை
Published on

உசிலம்பட்டி:

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட குஞ்சம்பட்டி கிராமத்தைச்சேர்ந்தவர் முத்துவேலன், ஆட்டோ டிரைவர்.

இவரது மனைவி அமுதா (வயது34). இவர் உசிலம்பட்டி பெண் போலீசாக  பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அமுதா சேலையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து தகவல் அறிந்த  உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடம் வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

குடும்ப பிரச்சினையால் அமுதா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com