வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின்பறிப்பு

வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் பெண்ணிடம் 5 பவுன் செயின்பறிப்பு
Published on

வேலூர்:

வேலூர் வேலப்பாடி பி.எஸ்.எம். தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சாந்தி (வயது 40). இவர், நேற்று மாலை பூந்தோட்டம் பகுதியில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர் திடீரென சாந்தியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தி திருடன்.. திருடன்.. என கூச்சலிட்டார். ஆனால் அவர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com