கோயம்பேட்டில் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை கொள்ளை

கோயம்பேடு பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #JewelRobbery
கோயம்பேட்டில் பஸ்சில் பெண்ணிடம் 11 பவுன் நகை கொள்ளை
Published on

போரூர்:

ஆந்திரா மாநிலம் சித்தூரை சேர்ந்தவர் கல்பனா (வயது 22). இவர் தனது சகோதரருடன் சென்னையில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விட்டு நேற்று முன்தினம் மதியம் சித்தூர் செல்வதற்காக கோயம்பேடு பேருந்து நிலையம் வந்தார்.

பஸ்சில் ஏறி தன்னிடம் இருந்த பையை இருக்கைக்கு மேல் வைத்துவிட்டு அமர்ந்தார். சிறிது நேரம் கழித்து பஸ் கிளம்பியபோது பையை காணாமல் அதிர்ச்சியடைந்தார். அந்த பையில் 11 பவுன் நகை இருந்தது. அதை மர்ம நபர்கள் எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து கோயம்பேடு பஸ் நிலையம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #JewelRobbery

X

Maalai Malar
www.maalaimalar.com