திருச்சியில் பெண் என்ஜினீயர் மாயம்

பெண் என்ஜினீயர் மாயமானது குறித்து அவரது பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சியில் பெண் என்ஜினீயர் மாயம்
Published on

திருச்சி:

திருச்சி வயலூர்ரோடு அம்மையப்பநகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மகள் தீபா (வயது 23), சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்து வந்துள்ளனர். இதனால் வேலையை விட்டு வருமாறு கூறியதாக தெரிகிறது. இதனால் தீபா சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்துள்ளார்.

பின்னர் வீட்டில் இருந்த அவர் சோகத்துடன் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீட்டைவிட்டு வெளியே சென்ற அவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் திருச்சி அரசு மருத்துவமனை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com