பிறந்த குழந்தையை தெருவில் விட்டுச் சென்ற பெண் - உ.பி.யில் கொடூரம்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பிறந்த குழந்தையை காரில் வந்த பெண் ஒருவர் தெருவில் விட்டுச் சென்ற வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. #caughtoncamera
பிறந்த குழந்தையை தெருவில் விட்டுச் சென்ற பெண் - உ.பி.யில் கொடூரம்
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம் மிசாபர்நகர் பகுதியில் உள்ள ஒரு தெருவில் சன்ரோ கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அங்கு ஒரு வீட்டு வாசலில் நின்றது. காரில் இருந்த பெண் பிறந்த குழந்தையை வெளியே வீசினார். பின்னர் அந்த கார் வேகமாக அங்கிருந்து சென்று விட்டது. இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காமேராவில் பதிவானது.

இதனை கண்ட அனைவரும் அதிர்ச்சிக்கு உள்ளானர். அந்த குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது. அதனை கண்ட பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். #caughtoncamera

X

Maalai Malar
www.maalaimalar.com