உயரதிகாரியின் பாலியல் தொல்லை - உ.பி.யில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்டத்தில் பெண் போலீஸ் ஒருவர் உயரதிகாரியின் பாலியல் தொல்லையால் இன்று தூக்கில் பிணமாக தொங்கினார். #Womanconstable #harassedbysenior
உயரதிகாரியின் பாலியல் தொல்லை - உ.பி.யில் பெண் போலீஸ் தூக்கிட்டு தற்கொலை
Published on

லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாரபங்கி மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வந்தவர் அர்ச்சனா(பெயர் மாற்றப்பட்டுள்ளது.) 25 வயது பெண்ணான இவர் தன்னுடன் பணியாற்றிவந்த உயரதிகாரியால் தொடர்ந்து பாலியல் தொல்லைக்கு உள்ளாகி வந்துள்ளார்.

இந்நிலையில், தனக்கு ஏற்பட்ட மன உளைச்சலை தற்கொலை வாக்குமூலமாக கடிதத்தில் எழுதி வைத்த அர்ச்சனா இன்று தனது வசிப்பிடத்தில் தூக்கில் பிணமாக தொங்கினார். 

அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் ஸ்ரீவத்சவா, இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். #Womanconstable #harassedbysenior

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com