

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும்.
ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது தேர்தல் பிரசாரத்தில் தலைவர்கள் ஈடுபட்டு இருப்பார்கள்.
இதில் நவம்பர் மாத இறுதிக்குப் பதிலாக டிசம்பர் மாதம் 3-வது வாரத்தில் பாராளுமன்ற கூட்டத்தொடரை கூட்டுவது பற்றி ஆலோசிக்கப்பட்டது.
இதுபற்றி மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யப்பட்டு அதன் பிறகு குளிர்கால கூட்டம் தொடங்கும் தேதி அறிவிக்கப்படும். #Parliament