விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பரிசுத் தொகை ரூ. 311 கோடியாக உயர்வு

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடருக்கான பரிசுத் தொகை 311 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. #Wimbledon
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பரிசுத் தொகை ரூ. 311 கோடியாக உயர்வு
Published on

இதில் ஆஸ்திரேலியா ஓபன் முதலாவதாகவும், பிரெஞ்ச் 2-வதாகவும், விம்பிள்டன் 3-வதாகவும், அமெரிக்கா ஓபன் கடைசியாகவும் நடைபெறும். ஜனவரி மாதம் முடிவடைந்த ஆஸ்திரேலிய ஓபனின் பரிசுத்தொகை 41.32 மில்லியன் டாலராக இருந்தது.

தற்போது விம்பிள்டன் தொடருக்கான பரிசுத் தொகை 46.6 மில்லியன் டாலராக உயர்த்தப்பட்டுள்ளது. இந்திய பண மதிப்பில் இது 311.06 ரூபாயாகும். இது கடந்த ஆண்டடை விட 7.6 சதவீதம் உயர்வாகும். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா 2.25 மில்லியன் பவுண்டு (19.99 கோடி ரூபாய்) வழங்கப்பட இருக்கிறது. கடந்த முறை 2.2 மில்லியன் பவுண்டுதான் வழங்கப்பட்டது.

X

Maalai Malar
www.maalaimalar.com