பெடரர் விளையாடிய விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த சச்சின்

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர், லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் அரையிறுதியின் ரோஜர் பெடரர் ஆட்டத்தை நேரில் கண்டுகளித்தார்.
பெடரர் விளையாடிய விம்பிள்டன் அரையிறுதி ஆட்டத்தை நேரில் பார்த்து ரசித்த சச்சின்
Published on

குறிப்பாக லண்டனில் நடைபெறும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகளை நேரில் சென்று பார்க்க விரும்புவார். இவர் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரின் தீவிர ரசிகர்.

நேற்று விம்பிள்டன் அரையிறுதி ஒன்றில் பெடரர், தாமஸ் பெர்டிச்சை சந்தித்தார். தற்போது லண்டனில் இருக்கும் சச்சின் இந்த போட்டியை நேரில் சென்று கண்டுகளித்தார். இந்த போட்டியில் பெடரர் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

ரோஜர் பெடரரின் போட்டியை கண்டுகளித்த சச்சின் கூறுகையில் ‘‘எப்போதும் இங்கே வருவது எனக்கு சிறப்பான ஒன்று. நான் டென்னிஸ் விளையாட்டின் தீவிர ரசிகன். விம்பிள்டன் தொடரைவிட சிறந்தது ஒன்றுமில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ரோஜர் பெடரரின் ஆட்டத்தை கண்டுகளித்து வருகிறேன். ஆகவே, இங்கே வந்து ரோஜர் பெடரருக்கு மீண்டும் ஆதரவு அளிக்கிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com