

பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரின் முதல் நாளான நேற்று, மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவதற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் சபாநாயகர் சுமித்ரா மகாஜனிடம் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. தெலுங்குதேசம் சார்பிலும் நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. திவாகர் ரெட்டி, நாளை நடைபெறும் விவாதத்தில் பங்கேற்கப் போவதில்லை என அறிவித்திருப்பது கட்சி வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. விவாதத்தில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கூட்டத் தொடரிலும் தான் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘கொறடா உத்தரவிடுவது வழக்கமான நடைமுறைதான். எப்படி இருந்தாலும் இந்த ஆட்சி கவிழப்போவதில்லை. என்னாலும் விவாதத்தின்போது ஆங்கிலத்திலோ அல்லது இந்தியிலோ பேச முடியாது. எனவே நான் சபையில் இருக்கிறேனா, இல்லையா என்பது முக்கியமில்லை’ என்றார்.