மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்களால் ஆலையை தொடங்க முடியாது- வேதாந்தா நிறுவனம்

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்களால் ஆலையை தொடங்க முடியாது என வேதாந்தா நிறுவனம் தெரிவித்துள்ளது.
மூடும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் எங்களால் ஆலையை தொடங்க முடியாது- வேதாந்தா நிறுவனம்
Published on

சென்னை:

வேதாந்தா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எங்கள் ஸ்டெர்லைட் ஆலை விரைவில் திறக்கப்படும் என்று, தலைமை செயல் அதிகாரி கூறியதாக சில பத்திரிகைகளில் செய்திகள் வெளி வந்துள்ளன.

ஆனால், எங்கள் தலைமை செயல் அதிகாரி அவ்வாறு எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை. தூத்துக்குடியில் அமைதி நிலவ வேண்டும் என்பது தான் எங்கள் முன்னுரிமை. ஆலையை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், எங்களால் திறக்க முடியாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com