4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு - நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை

திண்டுக்கல் அருகே 4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகையிட்டனர்.
4 வழிச்சாலை அமைக்க எதிர்ப்பு - நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் விவசாயிகள் முற்றுகை
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் அருகே நத்தம்- துவரங்குறிச்சி இடையே 27 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக 4 சாலை அமைக்கப்பட உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டால் 500 ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்படும். அதோடு அந்த பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிணறுகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். எனவே இந்த பகுதியில் 4 வழிச்சாலை அமைக்க தேவை இல்லை என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனாலும் அதனை மீறி அதிகாரிகள் நிலம் சர்வே பணியில் ஈடுபட்டனர். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விவசாயிகள் இன்று காலை ஒன்று திரண்டனர். அவர்கள் நேரடியாக திண்டுக்கல் வந்தனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பேரணியாக வந்து நெடுஞ்சாலை நிலம் எடுப்பு துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் அதிகாரிகளை சந்தித்து மனுகொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com