கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்

கல்லணை கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வயல்களில் வெள்ளம் சூழ்ந்ததால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
Published on

பூதலூர்:

கல்விராயன் பேட்டை கிராமத்தில் கல்லணை கால்வாய் கரையில் உடைப்பால் ஆயிரக்கணக்கான வயல்களில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இன்று காலை நிலவரப்படி கல்லணை கால்வாய்க்கு 29,115 கன அடி வினாடிக்கு தண்ணீர் வந்துகொண்டிருக்கிறது. இதில் காவிரிக்கு 9029 கன அடியும், வெண்ணாற்றில் 9016 கன அடியும், கொள்ளிடத்தில் 8030 கன அடியும் திறந்து விடப்படுகிறது. கல்லணை கால்வாயில் தண்ணீர் திறப்பு இல்லை.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com