வைக்கோல் போர்கள் தீப்பற்றி எரிந்து நாசம்

விராலிமலை அருகே 3 வைக்கோல் போர்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீ
தீ
Published on

விராலிமலை ஒன்றியம் மாங்குடி களத்துப்பட்டியை சேர்ந்த விவசாயிகளான ராமசாமியின் மகன்கள் காயாம்பூ (55), விஜயமூர்த்தி(47) ஆகியோர் தங்களது வீட்டின் அருகே அடுத்தடுத்து 5 வைக்கோல் போர்கள் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் திடீரென ஒரு வைக்கோல் போரில் தீப்பற்றி எரிந்தது. மற்ற வைக்கோல் போர்களுக்கும் தீ பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த இலுப்பூர் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் 3 வைக்கோல் போர்கள் முழுவதுமாக எரிந்து நாசமானது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com