வில்லிவாக்கக்தில் வாலிபரை தாக்கி செல்போன் பறிப்பு

வில்லிவாக்கக்தில் வாலிபரை தாக்கி செல்போன் பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செல்போன் பறிப்பு
செல்போன் பறிப்பு
Published on

அம்பத்தூர்:

கொரட்டூர் பாடி ராஜா தெருவை சேர்ந்தவர் விக்னேஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இன்று அதிகாலை சொந்த ஊரான மேல் மருவத்தூர் செல்வதற்காக பாடி மேம்பாலம் அருகே பஸ்சுக்காக காத்திருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்கள் திடீரென விக்னேசை கட்டையால் தாக்கி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து தப்பி சென்று விட்டனர்.

இது குறித்து வில்லிவாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com