வெளியுறவு அமைச்சகத்தின் புதிய செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமனம்

தற்போதைய வெளியுறவு அமைச்சக செயலாளர் ஜெய் ஷங்கரின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், புதிய செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமிக்கப்பட்டுள்ளார்.
வெளியுறவு அமைச்சகத்தின் புதிய செயலாளராக விஜய் கேஷவ் கோகலே நியமனம்
Published on

புதுடெல்லி:

மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளராக உள்ள ஜெய் ஷங்கரின் பதவிக்காலம் வரும் 28-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், மூத்த ஐ.எப்.எஸ் அதிகாரியும், சீனாவுக்கான இந்திய தூதராக உள்ள விஜய் கேஷவ் கோகலே புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

1981-ம் ஆண்டு பேட்ஜ் ஐ.எப்.எஸ் அதிகாரியான கேஷவ் கோகலே ஜெர்மனி மற்றும் மலேசியா நாட்டிற்கான இந்திய தூதராக பணியாற்றியுள்ளார். இந்திய - தைபேய் அமைப்பின் இயக்குநர் ஜெனரலாகவும் அவர் சிறப்பாக பணிபுரிந்துள்ளார்.

2015-ம் ஆண்டு ஜனவரி மாதம் செயலாளராக நியமிக்கப்பட்ட ஜெய் ஷங்கர், விரைவில் தனது பொறுப்புகளை கேஷவிடம் ஒப்படைக்க உள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com