தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை: பத்திரப்பதிவு- போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீசார் பத்திரப் பதிவு அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை நடத்தியதில் ரூ.8 லட்சத்து 80 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டன. #VigilanceRaid
தமிழகம் முழுவதும் அதிரடி வேட்டை: பத்திரப்பதிவு- போலீஸ் டிஎஸ்பி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை
Published on

சென்னை:

சென்னையில் அசோக் நகர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடத்திய சோதனையில் ரூ.1 லட்சத்து 88 ஆயிரத்து 900 கைப்பற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனையில் ஈடுபட்ட போது கணக்கில் காட்டப்படாத ரொக்கம் ரூ.1 லட்சத்து 2 ஆயிரத்து 250 மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஜெய்சங்கர் என்பவர் உர மானியம் பெற தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளர் ராமச்சந்திரனை அணுகினார். அப்போது அவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் கேட்டு அவரிடம் லஞ்சப்பணம் கொடுத்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

ஈரோடு மாவட்டம் சிக்கரசன் பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் நிலம் தொடர்பான விவகாரத்திற்கு கோட்டாட்சியர் அலுவலக உதவியாளர் ரங்கசாமி ரூ.65 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் எழுந்தது. லஞ்ச பணத்தை கொடுத்த போது ரங்கசாமி லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த திருலோகசுந்தர், புதிதாக கட்டிய திருமண மண்டபத்திற்கு சுகாதார சான்றிதழ் கேட்டு சுகாதார துணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள நேர்முக உதவியாளர் சுந்தர்ராஜை அணுகியபோது ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்ட தாக புகார் தெரிவித்தார். அதன்பேரில் லஞ்ச பணமாக ரூ.6 ஆயிரத்தை பெற்றபோது லஞ்சஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

கிருஷ்ணகிரி மாவட்டம் துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் ரொக்கம் கைப்பற்றப்பட்டன. #VigilanceRaid

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com