வேப்பம்பட்டில் 2 குழந்தைகளுடன் ரெயில் முன்பாய்ந்து பெண் தற்கொலை

வேப்பம்பட்டில் கணவருடன் ஏற்பட்ட தகராறில் 2 குழந்தைகளுடன் பெண் ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பம்பட்டில் 2 குழந்தைகளுடன் ரெயில் முன்பாய்ந்து பெண் தற்கொலை
Published on

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டை அடுத்த பெருமாள்பட்டு பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன், கூலி தொழிலாளி. இவரது மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு இலக்கியா (3), ஸ்ரீஜா (2) ஆகிய 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

லட்சுமணனுக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இன்று காலையிலும் அவர்களுக்கு இடையே தகராறு நீடித்தது.

இதனால் மனவேதனை அடைந்த சரஸ்வதி தனது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

பின்னர் சரஸ்வதி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அங்கிருந்து நடந்து வேப்பம்பட்டு ரெயில் நிலையத்துக்கு வந்தார். அப்போது திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரெயில் வந்தது.


விரக்தியில் இருந்த சரஸ்வதி திடீரென்று தனது 2 குழந்தைகளுடன் ரெயில் முன்பு பாய்ந்தார். இதில் சரஸ்வதியும் அவரது 2 குழந்தைகளும் உடல் சிதறி பலியானார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com