வேப்பம்பட்டு அருகே குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை

வேப்பம்பட்டு அருகே குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பம்பட்டு அருகே குழந்தை இறந்த சோகத்தில் தாய் தற்கொலை
Published on

வேப்பம்பட்டு:

வேப்பம்பட்டு ஆர்.ஜி.பி. நகரை சேர்ந்தவர் கார்த்திக். வெல்டர். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரேவதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.

ஆனால் பிறந்த 7 நாட்களில் குழந்தை இறந்து விட்டது. இதனால் ரேவதி குழந்தை இறந்த துக்கத்தில் இருந்து வந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரேவதி மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரேவதிக்கு திருமணமாகி 2 வருடங்கள் மட்டுமே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com