பயணியின் பைக்குள் இருந்த விஷப்பாம்பு- விமான நிலையத்தில் பரபரப்பு

அபுதாபி செல்ல வேண்டிய பயணியின் லக்கேஜில் விஷப்பாம்பு இருந்ததால் கொச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. #CochinAirport
பயணியின் பைக்குள் இருந்த விஷப்பாம்பு- விமான நிலையத்தில் பரபரப்பு
Published on

கடந்த ஞாயிற்றுக்கிழமை கொச்சி விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அபுதாபி செல்ல வேண்டிய பயணிகளின் உடமைகள் சோதனை செய்யப்பட்டன.

அப்போது, ஒரு லக்கேஜை ஸ்கேன் செய்த மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் அதற்குள் ஏதோ ஒன்று ஊர்வதைக் கண்டனர்.

அதிகாரிகள் நடத்திய சோதனையில் அந்த லக்கேஜ் பாலக்காடைச் சேர்ந்த சுனில் என்பவருடையது என தெரியவந்தது.  லக்கேஜை எடுக்க வந்த சுனிலிடம் பாதுகாப்பு படையினர் பிரித்து சோதனை செய்ய வேண்டும் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com