வேலூர் சைதாப்பேட்டையில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர்களுக்கு அடி-உதை

பெண்ணை கிண்டல் செய்த வாலிபர்களுக்கு அடி-உதை விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவர்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.
வேலூர் சைதாப்பேட்டையில் பெண்ணை கிண்டல் செய்த வாலிபர்களுக்கு அடி-உதை
Published on

வேலூர்:

வேலூர் சைதாப்பேட் டையை சேர்ந்தவர் மணிகண்டன். நேற்று அவரது மனைவியுடன் நடந்து சென்றார். அப்போது அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (35). பிரகாஷ் பால தண்டாயுதபாணி ஆகியோர் மணிகண்டனின் மனைவியை கிண்டல் செய்தனர்.

மணிகண்டன் அவரது நண்பர் ரகுராமன் என்கிற ரோபோ (19) முத்து ஆகியோர் இது பற்றி தட்டிக் கேட்டனர். அப்போது ஏற்பட்ட தகராறில் உதயகுமார் பால தண்டாயுதபாணி ஆகியோர் தாக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த அவர்கள் வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.

மேலும் பெண்ணை கிண்டல் செய்ததாக உதயகுமார் உள்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com