கோக், பெப்சி குளிர்பானங்களை கடைகளில் விற்கமாட்டோம் - வெள்ளையன்

கோக்-பெப்சி உள்ளிட்ட அன்னிய குளிர்பானங்களை ஆகஸ்ட்-15-ந்தேதி முதல் கடைகளில் விற்கமாட்டோம் என வணிகர் சங்க தலைவர் த.வெள்ளையன் கூறியுள்ளார்.
கோக், பெப்சி குளிர்பானங்களை கடைகளில் விற்கமாட்டோம் - வெள்ளையன்
Published on

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில, மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில தலைவர் த.வெள்ளையன் தலைமையில் விழுப்புரத்தில் நடந்தது. மே-5 ந்தேதி தூத்துக்குடியில் வணிகர் தின மாநாட்டை வெற்றிகரமாக நடத்திய மாநில-மாவட்ட நிர்வாகிகளுக்கு நன்றி. பாராட்டுகள் தெரிவித்து கவுரவிக்கப்பட்டனர்.

வணிகர் சங்க பேரவைக்கு புதிய மாநில பொதுச்செயலாளராக சி.எல். செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார். கூட்டத்தில் மாநில தலைவர் த.வெள்ளையன் பேசியதாவது:-

இந்த சூழ்நிலையில் பொதுமக்கள் அன்னிய தயாரிப்பு பொருட்களை தவிர்த்து நம் நாட்டு தயாரிப்பு பொருட்களைத் தான் வாங்க வேண்டும் என்ற ஒரு சுதேசி கொள்கையை கடைபிடிக்க வேண்டும்.

வருகிற ஆகஸ்ட் முதல் வாரத்தில் ‘‘சுதேசி பொருட்களைத்தான் வாங்க வேண்டும்’’ என்ற இருசக்கர வாகனத்தில் வணிகர்கள் விழிப்புணர்வு பிரசார பயணம் தமிழகம் முழுவதும் இருந்து தொடங்கி திருச்சி மலைக்கோட்டைக்கு ஆகஸ்ட் 15-ந்தேதி வந்தடைகிறது.

அங்கு ‘சுதேசி பிரகடனம்’ செய்ய இருக்கிறோம். அன்னிய குளிர்பானங்களான கோக்-பெப்சியையும் அதன் இதர தயாரிப்புகளையும் கடைகளில் விற்காமல் புறக்கணிக்க வேண்டும். அன்று முதல் அந்நிய பொருட்களின் தயாரிப்புகளை கடைகளில் வியாபாரிகள் முன்னிலை படுத்தாமல் தவிர்க்க வேண்டும். விளம்பரங்கள் மூலம் ஏற்படும் அந்நிய மோகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

நம் நாட்டு தயாரிப்பு சுதேசி பொருட்களை தான் கடைகளில் விற்க வேண்டும் தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து சில்லரை வியாபாரிகளும் வணிகர் சங்க பேரவையின் வேண்டுகோளை ஏற்று உடனடியாக இதனை செயல்படுத்த முன்வர வேண்டுகிறேன்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com