வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வருகை அதிகரிப்பு

வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அப்போது கடலில் குளித்து மகிழ்ந்தனர்.
வேளாங்கண்ணி கடலில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆனந்த குளியல் போடுவதை காணலாம்
வேளாங்கண்ணி கடலில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் ஆனந்த குளியல் போடுவதை காணலாம்
Published on

வேளாங்கண்ணி:

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் இந்த பேராலயம் திகழ்கிறது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த ஆலயத்திற்கு தமிழகம் மட்டுமின்றி உள்ளூர் மற்றும் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் வந்து செல்கின்றனர்.

வருகிற 31-ந்தேதி வரை கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பல்வேறு தளர்வுகள் காரணமாக கடந்த செப்டம்பர் மாதம் 9-ந் தேதியிலிருந்து வேளாங் கண்ணி பேராலயத்திற்கு வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து மாதாவை தரிசித்து செல்வதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளித்திருந்தது.

அதனை தொடர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்களும், சுற்றுலா பயணிகளும் கார்களிலும், பஸ் மூலமாகவும் வேளாங்கண்ணிக்கு வந்த வண்ணம் உள்ளனர். விடுமுறை நாள் என்பதால் கூட்டம் தினமும் அதிகரித்து வருகிறது. இங்குவரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக மொட்டை அடித்து கடலில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com