முதுகுளத்தூர் பஜார் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு

முதுகுளத்தூர் பஜார் பகுதியில் சரக்கு, வாடகை வாகனங்களை நிறுத்துவதால், வாகனங்கள் இயக்க முடியாமல் போக்குவரத்து பாதிக்கபட்டுள்ளது.
முதுகுளத்தூர் பஜார் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்படும் சரக்கு வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு
Published on

முதுகுளத்தூர்:

முதுகுளத்தூரில் உள்ள கடைகளுக்கு வெளியூர்களில் இருந்து பொருட்களை இறக்க வரும் சரக்கு வாகனங்கள், பஜார், தேரிருவேலி விலக்கு சாலை யோரங்களில் ஆக்கிரமித்து நிறுத்தப்படுவதால், குறுகலாக உள்ள பஜார் ரோட்டில் வெளியூர்களுக்கு இயக்கப்படும் வாகனங்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் பலமணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து, வாகனங்கள் நடு ரோட்டில் நிறுத்தபடும் அபாயம் உள்ளது.

ஆகவே ரோட்டோரங்களில் நிறுத்தப்படும் வெளியூர் சரக்கு வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com