வத்தலகுண்டுவில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை

வத்தலக்குண்டுவில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை- பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
வத்தலகுண்டுவில் தனியார் கம்பெனி ஊழியர் வீட்டில் நகை- பணம் கொள்ளை
Published on

வத்தலக்குண்டு:

திண்டுக்கல் அருகே உள்ள வத்தலக்குண்டு காந்திநகர் வடக்கு கணவாய்பட்டி பைபாஸ் சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன். பேக்கரி கடையில் வேலை பார்த்து வருகிறார். அவரது மனைவி கல்யாணி. இவர்களது மகள் சுவேதா, தர்சினி. நேற்று காலை வழக்கம் போல் முருகன் பேக்கரி கடைக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த கல்யாணி தனது மகள்களுடன் வத்தலக்குண்டு முத்துமாரியம்மன் கோவிலில் மஞ்சள் நீர் ஊற்றுவதற்கு சென்று விட்டனர். மாலை வரை கோவிலில் அவர்கள் இருந்து விட்டனர்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்ம நபர்கள் காம்பவுண்டு சுவர் ஏறி குதித்தனர். பின்னர் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பீரோவை திறந்த அவர்கள் அதில் இருந்த நகை- பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மாலை நேரம் முருகன் வீடு திரும்பினார். அப்போது வீட்டு கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பீரோவை பார்த்த போது அதில் இருந்த 7 பவுன் நகை, ரூ. 40 ஆயிரம் ரொக்கபணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. பதறி போன முருகன் தனது மனைவிக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். அவர்கள் அதிர்ச்சியுடன் வீட்டுக்கு விரைந்தனர்.

இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசில் முருகன் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com