வாகனம் மோதியதில் சட்டக் கல்லூரி மாணவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சட்டக் கல்லூரி மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாகனம் மோதியதில் சட்டக் கல்லூரி மாணவர் பலி
Published on

தர்மபுரி:

தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அடுத்துள்ள சென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் சிலம்பரசன் (வயது 24).

இவர் கோவை சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று கல்லூரி விடுமுறை காரணமாக சொந்த ஊரான மொரப்பூருக்கு சிலம்பரசன் வந்தார். சிலம்பரசன் அதே பகுதியில் உள்ள அவரது நண்பர் அரவிந்தனுடன்  இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றார்.

இந்த நிலையில் மொரப்பூரில் இருந்து அரூர் செல்லக்கூடிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த வழியாக வந்து கொண்டிருந்த அடையாளம் தெரியாத வாகனம் அவகள் வந்த இருசக்கர வாகனத்தில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் அரவிந்தனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அந்த வழியாக வந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இருவரையும் அரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அப்போது சிலம்பரசன் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com