சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே உள்ள ராமசந்திரபுரத்தில் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Virudhunagar #Sattur #IrukkankudiMariammanTemple
Published on

விருதுநகர்:

சாத்தூர் அருகே உள்ள ராமசந்திரபுரத்தில் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசணம் செய்வதற்காக ஒரு குழுவினர் வேனில் சென்றனர். கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ராமசந்திரபுரம் அருகே சென்றுகொண்டிருந்த வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Virudhunagar #Sattur #IrukkankudiMariammanTemple

X

Maalai Malar
www.maalaimalar.com